ஒரே போர்வையுடன் உல்லாசக் காதல் – பிப்ரவரியில் டும் டும் டும்.. கண்டிப்பா எல்லாரும் வந்துடுங்க !


இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது போர்வையை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறார்.

இந்த உலகில் வினோதங்களுக்கு பஞ்சமேயில்லை. யாருக்கு யார் மீது காதல் ஏற்படும் என்பதை சொல்வதற்கில்லை. இதுவரை எத்தனையோ திருமண செய்திகளை படித்திருப்போம். ஆனால் இந்த செய்தி முற்றிலும் வினோதமானது தான்.

ஆம், இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது போர்வையை காதலித்து வருகிறாராம். விரைவில் அந்த போர்வையையே திருமணமும் செய்து கொள்ளப்போகிறார்.

பாஸ்கேல் செலிக் எனும் அந்தப் பெண் பல ஆண்டுகளாக ஒரே போர்வையை பயன்படுத்தி வந்ததன் பலனாக, அதையே காதலிக்க தொடங்கிவிட்டார். இதற்கு அவர் கூறும் காரணம், “எனக்கும் எனது போர்வைக்குமான உறவு என்பது, வெகு நீண்டகால உறவு. மிகவும் நெருக்கமானதும், உறுதியானதும் கூட.

என் போர்வையுடன் நான் உல்லாசமாக இருந்திருக்கிறேன். எனது போர்வை ஒரு நம்பகமான ஒரு நண்பன். அது எப்போதும் எனக்காகவே இருக்கும். என்னை அணைத்துக் கொள்ளும். எனது போர்வையை தான் மிகத் தீவிரமாக காதலிக்கிறேன்.

எனது திருமணத்துக்கு எல்லோரும் நிச்சயம் வர வேண்டும். ஆடம், பாடல், கொண்டாட்டம் என என் திருமணம் மிகவும் குதூகலமாக இருக்கும்” என அனைவரையும் வரவேற்கிறார் பாஸ்கேல்.

பாஸ்கேல் செலிக்குக்கும் அவரது போர்வைக்கும் பிப்ரவரி 10ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. தனக்கு பிடித்தமான பொருளை திருமணம் செய்யும் முதல் நபர் அல்ல இவர். ஏற்கனவே ஒரு பெண் பெர்லின் சுவரையும், டோக்கியோவைச் சேர்ந்த ஒருவர் தனக்கு பிடித்த ஹோலோகிராமையும் திருமணம் செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: jaya.chitra

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!