14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண்ணை கர்ப்பமாக்கிய கொடூரன் சிக்கினான்..!


அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 29 வயதான பெண் ஒருவர், 14 ஆண்டுகளாக கோமா நிலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். யாரும் எதிர்பாராத வகையில் அவருக்கு கடந்த மாதம் 29–ந் தேதி குழந்தை பிறந்தது. 14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதனையடுத்து மருத்துவமனையில் சோதனை மற்றும் விசாரணையை போலீஸ் மேற்கொண்டது.

உண்மையை கண்டறிவதற்காக மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து ஆண்களும் டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது கோமாவில் இருந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்ததற்கு ஆண் நர்சு காரணம் என தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் ஆண் நர்சாக பணியாற்றும் நாதன் சுதர்லாந்த் (36) என்பவர் தான், கோமாவில் இருந்த பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கினார் என்பது டி.என்.ஏ. பரிசோதனை மூலம் தெரியவந்தது. இதையடுத்து பீனிக்ஸ் நகர போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!