கணவனின் அந்த உறுப்பை அறுத்து வீசிய மனைவி! ஏன் தெரியுமா?


ஒடிசா மாநிலம் நபராங்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அந்த நபர் தமிழ்நாட்டில் கூலி வேலை செய்து வந்தார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அவர் தனது சொந்த ஊருக்கு சென்று மனைவியை சந்தித்து வருவது வழக்கம். அதேபோல் தற்போதும் வேலையை முடித்துவிட்டு அவர் சொந்த ஊர் சென்று இருந்தார்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக தனது கணவரின் மீது அந்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் அவருடன் தகாத உறவு வைத்திருப்பதாகவும் அவரது மனைவி சந்தேகித்து உள்ளார். கணவனின் நடத்தையும் இதற்கு ஏற்றார் போல் இருந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி ஒரு கொடூரமான முடிவை எடுத்தார். அதன்படி ஞாயிற்றுக்கிழமை இரவு தனது கணவன் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் கூர்மையான கத்தி ஒன்றை எடுத்த அவரது மனைவி தனது கணவரின் மர்ம உறுப்பை அறுத்து கையில் எடுத்தார்.

ரத்தவெள்ளத்தில் துடித்த அவரது சத்தம் கேட்டு ஊர் மக்கள் திரண்டனர். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மனைவியை கைது செய்துள்ள போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.-Source: timestamilnew

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!