பட்டப்பகலில் மேலும் ஒரு பாஜக தலைவர் கொடூரமாக கொலை… அதிர்ச்சியில் மோடி..!


மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அம்மாநில முதல்-மந்திரியாக கமல்நாத் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 17-ம் தேதி மன்ட்சார் பகுதி பாஜக தலைவர் பிரகலாத் பந்த்வார் (வயது 50) என்பவர் நிலத்தகராறு காரணமாக பட்டப்பகலிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அதே கட்சியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், பர்வானி பகுதியில், நடைபயிற்சிக்கு சென்ற பாஜக தலைவர் மனோஜ் தாக்கரேவை ஒரு மர்ம கும்பல் கொன்றுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே வாரத்தில் 2 பாஜக தலைவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற கொலை சம்பவங்கள் மீண்டும் நடக்காதவாறு பாதுகாப்பை அதிகப்படுத்தவும் போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அம்மாநில உள்துறை மந்திரி பாலா பச்சன் தெரிவித்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!