மிட்நைட்டில வீட்டுக்கு வந்தா அவ்வளவு தான்… கணவருக்கு தீபிகா படுகோனே நிபந்தனை..!


சமீபத்தில் இத்தாலியில் திருமணம் செய்து கொண்ட நடிகை தீபிகா படுகோனே, தனது கணவர் ரன்வீர் சிங்குக்கு 3 நிபந்தனைகள் விதித்திருக்கிறார்.

இதுகுறித்து சினிமா நிகழ்ச்சியொன்றில் ரன்வீர் பகிர்ந்து கொண்டார். இரவு மிகவும் தாமதமாக வீடு திரும்பக் கூடாது, சாப்பிடாமல் வீட்டை விட்டுக் கிளம்பக் கூடாது, தன்னுடைய போன் காலை மிஸ்டு காலாக மாற்றிவிடக் கூடாது என்பதே அந்த 3 நிபந்தனைகள்.

முன்னதாக இருவரும் தத்தமது பெயரின் சர்நேமை மாற்றப்போவதில்லை என்று தீபிகா கூறியிருந்தார். கடும் முயற்சிகள் மூலம் தங்கள் பெயருக்கென தனித்த அடையாளத்தைப் பெற்றிருக்கும் நிலையில் சர்நேம் மாற்றம் அவசியமில்லை என்று விளக்கமும் அளித்தார். அதையடுத்து தீபிகாவின் சர்நேமை ஏற்றுக்கொண்டு ‘ரன்வீர் சிங் படுகோனே’ என்று பெயர் மாற்றம் செய்யவும் தயார் என்று ரன்வீர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!