பிரபாசுடன் ரகசியமாக குடும்பம் நடத்தும் சர்மிளா..? அப்ப அனுஷ்கா இல்லையா..?


ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்தவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. இவர் ஹெலிகாப்டர் விபத்தில் கடந்த 2009ம் ஆண்டு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சி ஆரம்பித்து நடத்தி வருகிறார். அந்த வகையில் ராஜகசேகர ரெட்டியின் மகளும் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ். சர்மிளாவும் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

சகோதரர் ஜெகன் மோகனுக்கு ஆதரவாக சர்மிளா பிரச்சாரம் செய்து வருகிறார். இவரது கணவர் அனில் குமாரும் அரசியலில் உள்ளார். அனில் குமார் – சர்மிளா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2014ம் ஆண்டு சர்மிளாவும் பாகுபலி பிரபாசும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே திருமணமான சர்மிளா நடிகர் பிரபாசை தன்வசப்படுத்தி வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டன.

சர்மிளாவின் அரசியல் செல்வாக்கு காரணமாக பிரபாசும் அவ்வப்போது சர்மிளாவை சந்தித்து வருவதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டனர். இந்த செய்திகள் சிறிது நாட்கள் ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் வெளியாக ஆரம்பித்துள்ளனர். சர்மிளா நடிகர் பிரபாசுடன் ரகசியமாக குடும்பம் நடத்துவதாகவும், இது குறித்து அறிந்த அவரது கணவர் அனில் குமார் கோபத்தில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதனால் அதிர்ச்சி அடைந்த சர்மிளா தன்னுடைய அரசியல் வாழ்வை முடிவுக்கு கொண்டு வர தெலுங்கு தேசம் கட்சியினர் நடிகர் பிரபாசுடன் இணைத்து தன்னை பேசி வருவதாக கூறியுள்ளார். தான் ஒரு முறை கூட பிரபாசை நேரில் பார்த்தது இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தன்னையும் – பிரபாசையும் இணைத்து காதல் கதை எழுதியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சர்மிளா காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.-Source: times

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!