புத்தாண்டு கொண்டாட்டத்தில் அண்ணனை கொடூரமாக கொன்ற தம்பி..!


அம்பர்நாத்தில் விழுப்புரத்தை சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தம்பியை போலீசார் கைது செய்தனர்.

போதையில் தகராறு

தானே மாவட்டம் அம்பர்நாத் சுவாமி நகரில் வசித்து வந்தவர் கணேஷ் (வயது35). இவரது தம்பி விரேன் (28). இவர்களது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் கடுக்கலூர் ஆகும். கணேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு சபரிமலை சென்று வந்தார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் அண்ணன், தம்பி இருவரும் புத்தாண்டையொட்டி மது குடித்தனர். போதையில் திடீரென இருவருக்கும் இடையே தகராறு உண்டானது. ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர்.

இதில் கடும் கோபம் அடைந்த விரேன் அங்கிருந்த கூர்மையான ஆயுதத்தால் கணேசின் கழுத்தில் குத்தி உள்ளார்.

தம்பி கைது

இதில் படுகாயமடைந்த கணேஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேரத்திலேயே அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த அம்பர்நாத் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அவரது மனைவி புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விரேனை கைது செய்தனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!