கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி – நேரில் பார்த்த கணவன் செய்த அதிர்ச்சி செயல்..!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், வீட்டில் வேறொரு நபருடன் தனிமையில் இருந்ததால், மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்து விட்டதாக, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

கோவில்பட்டி நடராஜபுரம் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மாரிமுத்துவும், விமலாவும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், விமலாவின் நடத்தை மீது மாரிமுத்துவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதை அடுத்து நடராஜபுரம் தெருவில் உள்ள வாடகை வீட்டை மாரிமுத்து காலி செய்து விட்டார். பக்கத்து தெருவில் சொந்தமாக கட்டியுள்ள புதிய வீட்டிற்கு நேற்று அவர்கள் குடிபெயந்துள்ளனர்.

பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு பொருட்களை மாற்றும் வேலையில் அவர்கள் ஈடுபட்டு இருந்தனர். இரவில் வேலையை நிறுத்தி விட்டு புதிய வீட்டில் அனைவரும் உறங்கினர். அதிகாலையில் குழந்தை அழும் சத்தம் கேட்டு எழுந்த மாரிமுத்து தனது மனைவி விமலா வீட்டில் இல்லாததைக் கண்டார்.

ஒருவேளை பழைய வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துவரச் சென்று இருக்கலாம் என்று நினைத்த மாரிமுத்து அங்கு சென்றுள்ளார். அப்போது பழைய வீட்டில் வேறொரு நபருடன் விமலா இருந்ததாகக் கூறப்படுகிறது. மாரிமுத்துவை பார்த்தவுடன் விமலாவுடன் இருந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அப்போது கோபம் அடைந்த மாரிமுத்து, அருகில் இருந்த இரும்புக் கம்பியால் விமலாவை ஆத்திரம் தீர சரமாரியாக தாக்கியுள்ளார். தலையில் பலமாக அடிபட்டத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்த விமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட மாரிமுத்து, குழந்தைகளை தனது தாய் வீட்டில் ஒப்படைத்து விட்டு கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்தில் சரண் அடைந்தார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த விமலாவின் சடலத்தை மீட்ட போலீசார், கொலைக்கு பயன்படுத்திய இரும்புக் கம்பியையும் கைப்பற்றினர். தப்பி ஓடிய நபர் குறித்த விசாரணையில், அவர் பெயர் குமார் என்பது, அதே பகுதியில் வெல்டிங் கடை வைத்திருப்பவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

இரும்புக் கம்பியால் அடிபட்டு ரத்தம் சொட்டச் சொட்ட ஓடிய குமார், நண்பரின் உதவியோடு பேருந்து நிலையம் சென்று தப்பி விட்டதாகக் கூறப்படுகிறது.-Source: polimernews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!