ஜாதகம் பொருந்தல.. காதலியை மறந்து விடு… வாலிபர் எடுத்த விபரீத முடிவு..!


சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணையில் வசித்து வந்தவர் அரவிந்த் (வயது 31). பட்டுகோட்டையை சேர்ந்த இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது பெற்றோர், இவருக்கு பெண் பார்த்தனர். அந்த பெண்ணையே அரவிந்த் தீவிரமாக காதலித்து வந்தார்.

பின்னர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அந்த பெண்ணின் ஜாதகத்தை வாங்கி ஜோதிடரிடம் காண்பித்தனர். அதில் அந்த பெண்ணின் ஜாதகம் பொருந்தவில்லை என்று ஜோதிடர் கூறியதாக தெரிகிறது.

இதனால் அரவிந்தின் பெற்றோர் அந்த பெண் வேண்டாம் என்று கூறி, வேறு இடத்தில் பெண் பார்த்தனர். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அரவிந்த், நேற்று முன்தினம் இரவு, தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பீர்க்கன்காரணை போலீசார், தற்கொலை செய்த அரவிந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!