விமானத்தை அவசரமாக தரையிறக்கிய விமானி – காரணத்த கேட்டா சிரிச்சிடுவீங்க..!


அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் வானில் விமானத்தில் பறந்துகொண்டிருந்த விமானி ஒருவர், சிறுநீரை அடக்க முடியாமல், நெடுஞ்சாலையில் விமானத்தை நிறுத்திவிட்டு சாலையோரத்தில் சிறுநீர் கழித்த சம்பவம் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் தென்கிழக்கில் கடற்கறையை ஒட்டி அமைந்துள்ள அழகிய இயற்கை எழில் கொஞ்சும் மாகாணம் அலபாமா. சுற்றுலா பயணிகளின் ஆதர்ச இடங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. இங்கு சமீபத்தில் ஓர் நகைச்சுவை நிகழ்வு நடந்துள்ளது.

விமான பைலட் பயிற்சி மேற்கொள்ளும் மாணவர் ஒருவர், சிறிய ரக விமானத்தை எடுத்துக்கொண்டு வானில் பறந்துள்ளார். அலபாமா தேசிய நெடுஞ்சாலையின் மேல் சென்ற விமானம் திடீரென நெடுஞ்சாலையில் தரை இறங்க, சாலையில் சென்ற பயணிகளுக்கு ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி.

நெடுஞ்சாலையில் காரில் சென்றுகொண்டிருந்த ஓர் தம்பதி காரை விமானம் அருகே நிறுத்தி விமானத்தை வீடியோ படம் எடுத்தனர். விமானி எதற்காக விமானத்தை சாலையில் தரைஇறக்கினார் எனத் தெரியாமல் அவர்கள் படம் எடுத்துக்கொண்டிருக்கவே, விமானி அவசரமாக விமானத்தில் இருந்து இறங்கிவந்து சாலையோரத்துக்குச் சென்று சிறுநீர் கழித்தார். இதுவும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் அங்கு பலரை சிரிக்கவைத்துள்ளது.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!