3 மாதங்களேயான பெண் குழந்தையை கொலை செய்த தாய்… பின்னணியில் அதிர்ச்சி…!


காசியாபாத் பாட்லா நகரை சேர்ந்தவர் ஆர்தி (வயது 22) கடந்த 3 மாதங்களுக்கு முன் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் தனக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லையே என்ற கோபத்திலும் மன வெறுப்பிலும் ஆர்தி இருந்து உள்ளார்.

மேலும் அவரது குடும்பத்தினர் ஆண் குழந்தையை தான் வேண்டும் என மிரட்டி வேறு உள்ளனர். இந்த நிலையில் ஆர்தி கோபமடைந்து குழந்தையை தலையணையால் தாக்கி உள்ளார்.

மேலும் குழந்தையை கொலை செய்து சுருட்டி வாஷிங் மெஷினுக்குள் வைத்து உள்ளார். அதனை நன்கு மூடி உள்ளார். ஆனால் இது குறித்து குழந்தையை யாரோ கடத்தி விட்டதாக புகார் கொடுத்து உள்ளார்.

போலீசார் விசாரனை நடத்தியதில் பின்னர் ஆர்தி தான் குழந்தையை வாஷிங்மெஷினில் போட்டு கொலை செய்ததாக உண்மையை ஒப்புகொண்டார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். – Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!