7 கோடியை ஆட்டையப் போட்ட விஷால் பதவி விலகனும் – ராதிகா சரத்குமார் ஆவேசம்..!


அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் தலைமையில் சென்னை எழும்பூரில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் சரத்குமாரின் மனைவியும், கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளருமான நடிகை ஆர்.ராதிகா சரத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் நடிகை ராதிகா சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெறுவதை பார்க்கும்போது, நிறைய தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விஷாலுடன் இருந்தவர்களே வெளியில் வந்துள்ளனர். விஷால் கொடுத்த வாக்குறுதிகளை மீறி 7 கோடி ரூபாயை எடுத்து செலவழித்து உள்ளார். அந்த பணத்தை சிறிய தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கி இருக்கிறார். அதை கருத்தில் கொண்டு அடுத்த தேர்தலை சந்திக்க இருக்கிறார்.

எல்லா தயாரிப்பாளர்களுக்கும் பயன்படும் வகையில் செயல்படவில்லை என்றால் அவர் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் ஆர்.சரத்குமார் நிருபர்களிடம் கூறும்போது, “நடிகர் விஷால் இப்போது யாராவது முறைப்படி கேட்டால் கணக்கு கொடுத்து இருப்பேன் என்கிறார். நடிகர் சங்கத்திடம் யாராவது முறைப்படி கணக்கு கேட்டார்களா? ரூ.150 கோடி, ரூ.60 கோடி முறைகேடு செய்துவிட்டதாக கூறி கடைசியில் ரூ.3 லட்சம் என்றார்கள். அவர்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? விஷால் அனைவரிடமும் உட்கார்ந்து பேச வேண்டும். அதன் பின்னர் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும். மத்திய அரசின் உளவுத்துறையினர் யாருடைய கணினிகளையும் கண்காணிக்கலாம் என்று உத்தரவிட்டு இருப்பது மற்றவர்களின் வீட்டுக்குள் நுழைவது போன்றது. இது கண்டனத்துக்கு உரியது” என்றார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!