கர்ப்பகாலத்தில் அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது இதனால் தானாம்..!


கர்ப்பகாலத்தில் பெண்களின் உடலில் பல மாற்றங்கள் நிகழும். அந்த மாற்றங்கள் அனைத்தும் அவளது வயிற்றில் வளரும் குழந்தையின் நலன் கருதியே ஆகும்.

பொதுவாக கருவுற்றுள்ள பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை அவதானித்திருப்பீர்கள். இவ்வாறு சிறுநீர் கழிப்பதனால் அவர்கள் நிம்மதியாக உறங்க முடியாது தவிப்பதையும் அவதானித்திருப்பீர்கள்.

கருவுற்றுள்ள தாய்மார்களின் பாதங்கள் மற்றும் குதிங்கால்கள் என்பன வீங்கிக் காணப்படும். அவ்வாறு வீங்கிக் காணப்படுவதால் அவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். வயிற்றில் உள்ள குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்கும் பொருட்டும் அதன் பாதுகாப்பு கருதியும் உடலானது தேவையான நீரை சேமித்து வைத்திருக்கும். இதனாலேயே கால்கள் வீங்கிக் காணப்படும்.

கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. ஆம், கருப்பையில் உள்ள குழந்தை வளர வளர அதற்கு ஏற்றாற் போல் கருப்பையும் வளரும் அல்லது விரிந்து கொடுக்கும். இதன் போது சிறுநீரகங்கள் மீது கருப்பையினால் அழுத்தம் கொடுக்கப்படும்.

சிறுநீரகங்கள் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தமானது சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்ற ஏதுவாக அமைகின்றது. இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி ஏற்படுகின்றது.


இவ்வாறு அடிக்கடி சிறுநீர் கழிப்பதை முழுமையாக நிறுத்த முடியாது. எனினும், அதனை கட்டுப்படுத்த பின்வரும் வழிமுறைகளை கையாள முடியும்.

01. கர்ப்பிணிகள் சிறுநீர் கழிக்கும் போது சற்று குனிந்திருப்பதன் மூலம் சிறுநீரகத்தில் உள்ள சிறுநீர் முழுமையாக வெளியேறும். இதன் மூலம் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருப்பதை தவிர்த்துக் கொள்ள முடியும்.

02. தேநீர், மதுசாரம் மற்றும் கோப்பி போன்றவற்றை பருகுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மேற்குறிப்பட்டவற்றை பருகுவதன் மூலம் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி ஏற்படும்.

03. இரவு வேளைகளில் தண்ணீர் குடிப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி ஏற்படும். அதனால் இரவு வேளைகளில் தண்ணீர் பருகுவதை குறைத்துக் கொண்டு பகல் வேளைகளில் தண்ணீர் அருந்துவதை வழமையாக்கிக் கொள்ள வேண்டும். நாளொன்றுக்கு எட்டு கிளாஸ் தண்ணீர் பருக வேண்டும் என்பதையும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

04. வீட்டை விட்டு வெளியே செல்லும் சந்தர்ப்பங்களில் சிறுநீரகங்கள் வெறுமையாகும்படி சிறுநீர் கழித்து விட்டு செல்வது சிறந்தது. அத்துடன் அருகாமையில் மலசல கூடங்கள் எங்கு உள்ளன என்பது தொடர்பிலும் அறிந்து வைத்திருத்தல் சிறந்தது.

05. தடுமல் மற்றும் இருமல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் சில வேளைகளில் சிறுநீர் வெளியேறக் கூடும். இது போன்ற சந்தர்ப்பங்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் யூரினரிஇன்கொன்டினன்ட்ஸ்பாட் அணிந்திருப்பது அவசியம்.- © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!