நீர்கொழும்பிலிருந்து படகில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் நான்கு பேர் கடந்த 29 ஆம் திகதி ஆள் கடலில் படகு விபத்துக்குள்ளாகி காணாமல் போயுள்ளதாக தெரிய வருகிறது.
‘செனுரி துவ – தருசி புதா’ என்ற பெயர் கொண்ட படகில் சென்ற மீனவர்கள் நால்வரே காணாமல் போயுள்ளனர். கடந்த மாதம் 16 ஆம் திகதி நீர்கொழும்பிலிருந்து ‘செனுரி துவ – தருசி புதா’ என்ற படகில் காணாமல் போயுள்ள மீனவர்கள் தொழிலுக்கு சென்றுள்ளனர்.
கடந்த 29 ஆம் திகதி முதல் படகுடன் இருந்த தொடர்பு நிறுத்தப்பட்டதாகம் துங்கல்பிட்டிய பொலிஸ் நிலை யத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடற்கரை வீதியைச் சேர்ந்த ஸ்டென்லி ரொட்ரிகோ (படகு செலுத்துநர்), குடாப்பாடு பிரதேசத்தைச் சேர்ந்த நெல்சன் ரொட்றிகோ, அஜித் குமார மற்றும் பலகத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த லக்மால் ரொட்றிகோ ஆகியோரே இந்தப் படகில் சென்றவர்களாவர். – Source: metronews
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!