கூகுள் உதவியுடன் வங்கியில் கொள்ளையடித்த திருடன் சிக்கியது எப்படி..?


லண்டனை சேர்ந்த பிஷப் ஆக்லாந்து என்ற பகுதியை சேர்ந்தவர் சைமன் ஜோனஸ், இவருக்கு பெரும் பணநெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர் நினைக்கும் செயல்களை செய்ய இவரிடம் போதுமான பணம் இல்லை.

அந்த பணத்தை உழைத்து சம்பாதிக்கும் வழியும் அவருக்கு தெரியவில்லை. இதனால் குறுக்கு வழியில் பணத்தை பெற விரும்பினார். இதற்காக கூகுளில் பணத்தை குறுக்கு வழியில் பெறுவது எப்படி என தேடியுள்ளார்.

அவருக்கு வங்கியில் தான் அதிக பணம் இருக்கிறது. இதனால் அங்கு கொள்ளையடித்தால் அதிகமான பணம் கிடைக்கும் அதை வைத்து தான் நினைத்ததை செய்து வசதியாக வாழலாம் என எண்ணினார்.

இதையடுத்து கூகுளில் அவர் மாட்டிக்கொள்ளலாமல் திருடுவது எப்படி என தேடத்துவங்கினார். கூகுள் பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளது. அதை வைத்து அந்த பகுதியில் உள்ள ஃபேட் வெஸ்ட் என்ற வங்கியில் திருடலாம் என முடிவு செய்துவிட்டார்.

இதையடுத்து முகமுடி கண்ணாடி தொப்பி என தனது முகம் யாருக்கும் தெரியாத வகையில் மறைத்துக்கொண்டார். அந்த நாட்டில் குளிர் அதிகமாக இருப்பதால் சிலர் இப்படியாக ஆடைகளை அணிவது வழக்கம் அதனால் யாரும் இவரை வித்தியசமாக பார்க்கவில்லை.


முதலில் வங்கிக்கு சென்ற அவர் கேஷ் கவுண்டர் அருகே செல்ல சுமார் 15 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்தார். கடைசியாக இவர் கேஷ் கவுண்டருக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டது.

கேஷ் கவுண்டருக்கு சென்ற சைமன் உடனடியாக தனது பையில் வைத்திருந்த ஒரு ஸ்பிரே பாட்டிலை கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் எடுத்துக்காட்டி, அதில் ஆசிட் இருப்பதாகவும், கேஷ் கவுண்டரில் உள்ள பணத்தை எல்லாம் தராவிட்டால் அவர் மீது ஆசிட்டை தெளித்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த அந்த வங்கி ஊழியர் தான் கையில் வைத்திருந்த 370 யூரோக்களை அவரிடம் வழங்கினார். அதன் இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 33 ஆயிரமாகும். மேலும் சைமன் பணம் கேட்டபோது அவரிடம் இருந்த 1000 பவுண்ட் கட்டை எடுத்து கொடுத்தார். அவர் எடுக்கும் போது அதற்குள் சிறிய டிராக்கிங் கருவியை வைத்துக்கொடுத்தார்.

பொதுவாக அந்த நாட்டில் உள்ள வங்கியில் கேஷியரிடம் எப்பொழுதும் சிறிய டிராக்கிங் டிவைஸ் இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடந்தால் அப்பொழுது பணத்தை மீட்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழங்கப்பட்டிருக்கும்.

இந்த டிவைஸை பணக்கட்டிற்குள் வைத்தால் இந்த டிரைவஸ் இருப்பதே தெரியாது. அதை அந்த வங்கி ஊழியர் பணத்திற்குள் பொருத்தி கொடுத்து விட்டார். பின்னர் சைமன் வங்கியை விட்டு வெளியே சென்ற பின்பு போலீசாருக்கு இந்த திருட்டு குறித்தும். டிராக்கிங் டிவைஸ் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சைமன் எளிதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் திருடிய பணமும் அவரிடம் இருந்து மீட்கப்பட்டது. போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கூகுளில் தான் எப்படி வங்கியில் திருட வேண்டும் என்று படித்தது தெரியவந்தது. மேலும் இந்த திருட்டிற்கு அவர் தனது காதலியின் காரை பயன்படுத்தியுள்ளார். அவர் தன் காதலியிடம் காரை வாங்கி செல்லும் போது அவரது காதலிக்கு இவர் வங்கிக்கு கொள்ளையடிக்க தான் செல்கிறார் என்பது தெரியாதாம் இது மட்டும் அல்ல வங்கி கேஷ் கவுண்டரில் அவர் காண்பித்த ஸ்பிரே பாட்டிலில் ஆசிட்டே இல்லையாம்.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!