குழந்தை பெற்ற பெண்ணுடன் சிறுவன் ஓட்டம் – பெற்றோருக்கு நடந்த கொடூரம்.!


கர்நாடக மாநிலத்தின் கனகபுராவை சேர்ந்தவர் சித்தராஜூ. இவர் தான் மனைவி சகம்மா மற்றும் மகன் மனு இவர்களுடன் வசித்துவந்துள்ளார். சித்தராஜூவின் மகன் மனுவிற்கு திருமணமாகாத நிலையில், ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ள பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.

இவர்களின் கள்ளக்காதல் பலவருடங்களாக தொடர்ந்த நிலையில் பெண்ணின் கணவன் மற்றும் குடும்பத்தார் மனுவை கண்டித்துள்ளனர். ஆனால் இதையும் மீறி தொடர்பில் இருந்துள்ளனர்.

இந்தநிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அந்த பெண்ணுடன் சேர்ந்து தலைமறைவாகியுள்ளார் மனு. இதனையறிந்த பெண்ணின் குடும்பத்தார் மனுவின் பெற்றோரிடம் சண்டை போட்டு அவர்களை தாக்கியுள்ளனர்.

மகன் செய்த செயலால் அவமானமான நிலைக்கு தள்ளப்பட்ட சித்தராஜூவும், சகம்மாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.-source: spark

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!