பேட்ட இசை நிகழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள் அடித்த கூத்து.. இதெல்லாம் ரொம் ஓவர்..!


பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி அமர்ந்த இருக்கையுடன் சேர்ந்து அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் “பேட்ட”. தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் உள்பட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இப்படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகான நடிக்கும் நிலையில், விஜய் சேதுபதி, நவாஸுதின் சித்திகி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, மாளவிகா மோகனன், குரு சோமசுந்தரம், மேகா ஆகாஷ், சசிகுமார் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

இது ரஜினியின் 165ஆவது படம் என்பதால் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. படத்தின் ஆறு பாடல்களும், தீம் மியூசிக் கொண்ட ஆடியோவும் வெளியானது.

இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், அனிருத், எஸ்.பி.பி பாடிய ‘மரண மாஸ்’ பாடல் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலானது.

இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் இயக்குநர் சுப்புராஜ், ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, கலாநிதி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு வந்த ரஜினியின் ரசிகர்கள், ரஜினி அமர்ந்திருந்த காலி சோபா அருகில் குவிந்து நின்று செல்ஃபி எடுத்துச் சென்றனர்.

இச்சம்பவம், முகம் சுளிக்க வைத்ததாக அரங்கத்துக்கு வந்திருந்த சிலர் தெரிவித்தனர்.-source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!