செய்யாத தவறுக்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை..!


காதல் கண் கட்டுதே என்ற படத்தில் அறிமுகமான நடிகை அதுல்யா. இவர் அறிமுகத்திலேயே பல ரசிகர்களை ஈர்த்தவர். இந்நிலையில் இவரது நடிப்பில் அடுத்த வெளிவரவிருக்கும் படம் ஏமாலி, இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி அதுல்யா சில சர்ச்சைகளை சந்தித்தார்.

அதாவது ஏமாலி டீசரில் அதுல்யா புகைபிடிப்பது, டிரஸ் மாற்றுவது போல் காட்சிகள் இருந்தது, சில ரசிகர்கள் தங்கள் நட்சத்திரம் இப்படி பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்று ஆதங்கப்பட்டு அவரிடமே கேட்டனர்.

அதற்கு தற்போது அந்த இரண்டு காட்சிகளும் எனக்கு தெரியாமல் எடிட்டர் டீசரில் போட்டு விட்டார். கண்டிப்பாக அந்த காட்சிகள் படத்தில் இடம்பெறாது, மேலும் என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் எதிர்பார்ப்பை கண்டிப்பாக வீணடிக்க மாட்டேன் என்று கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!