தொண்டர்கள்தான் ஜெயலலிதாவுக்கு வாரிசு – அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி…!!


தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜூ மதுரையில் இன்று ஒரு விழாவில் பங்கேற்றார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி :- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனுக்கு தொப்பி சின்னம் வழங்கப்பட்டால், அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்படுமா?

பதில்:- அ.தி.மு.க. எப்போதும் வெற்றிவாகை சூடிய இயக்கம். இப்போது இரட்டை இலை சின்னமும் கிடைத்துள்ளது. எனவே தொப்பி சின்னம் யாருக்கு கிடைத்தாலும் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு இல்லை.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் மதுசூதனன் படித்தவர். பண்பாளர். திறமை மிக்கவர். எங்கள் கட்சியின் அவைத் தலைவராக உள்ளார். எனவே ஆர்.கே.நகர் மக்கள் அ.தி.மு.க.வுக்கு அமோக ஆதரவு தருவார்கள்.


கே:-ஜெயலலிதாவின் மகள் என அம்ருதா கூறி வருகிறாரே?

ப:- அவர் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காகவும், அரசியல் தூண்டுதலின் பேரில் தவறான தகவலை பரப்பி வருகிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லை. கட்சியின் 1½ கோடி தொண்டர்களே அவரது வாரிசுகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!