காதல் வலையில் நர்ஸ் மட்டுமல்ல.. எக்கச்சக்க பெண்கள்.. விபின் பற்றி திடுக்கிடும் தகவல்கள்..!


நர்ஸ் ஸ்ரீஜாவை கொன்ற விபின் இன்னும் பல பெண்களை ஏமாற்றி உள்ளது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பான விசாரணையை போலீசார் கையில் எடுத்துள்ளனர்.

நர்ஸாக வேலை பார்த்த ஸ்ரீஜாவை காதலிப்பது போல நடித்து ஏமாற்றி, அவரை கர்ப்பமாக்கி விட்டவர்தான் விபின் என்ற டிரைவர். லவ் பண்ணாலும் சற்று ஒதுங்கியே பழகியுள்ளர் நர்ஸ் ஸ்ரீஜா. அதனால்தான் கூல்-டிரிங்ஸில் மயக்கமருந்தை கொடுத்து கற்பழித்துள்ளார்.

விளைவு 5 மாச கர்ப்பத்தில் ஸ்ரீஜா வந்து நின்றார். பிறகு கல்யாணம் செய்ய சொல்லி விபினை வற்புறுத்தவும் அவரை தீர்த்துகட்ட முடிவு செய்துள்ளார். வீட்டை விட்டு வெளியே நாம கல்யாணம் பண்ணிக்கலாம் என்று நடுராத்திரி கூட்டி வந்து ஆற்றில் தள்ளி கொலையும் செய்தார். பிறகு போலீசார் விபினை கைது செய்யவும் எல்லாவற்றையும் வாக்குமூலமாக தந்தார்.

ஆனால் இப்போது போலீசார் தங்களுடைய விசாரணை இரண்டாம் கட்டத்துக்கு கொண்டு போயிருக்கிறார்கள். அதன்படி, விபினின் நண்பர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் முயன்று வருகிறார்கள். ஏனெனில் ஸ்ரீஜா கொலை தொடர்பான ஆதாரங்கள் அவர்களிடம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், போலீசாரிடம் ஒருவர் வந்து செல்போனை கொடுத்துவிட்டு போனார்.


அந்த செல்போன் ஸ்ரீஜாவுடையதாம். அதை விபின்தான் ஸ்ரீஜாவுக்கு வாங்கி தந்திருக்கிறார். வேறு யாருடனும் பேசக்கூடாது, தன்னிடம் மட்டுமே பேச வேண்டும் என்று கண்டிஷன் போட்டுதான் அந்த செல்போனை ஸ்ரீஜாவுக்கு தந்திருக்கிறார்.

விபின் எப்போது செல்போன் வாங்கி தந்தாரோ அதுமுதல் ஸ்ரீஜா, விபினை தவிர வேறு யாருடனும் அதில் பேசவில்லை என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதோடு ரெண்டு பேரும் மணிக்கணக்கில் பேசியதும் தெரியவந்தது. இதுதான் ஸ்ரீஜா கொலைக்கு முக்கியமான ஆதாரம் என்பதால் அந்த செல்போன் இப்போது கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

இது எல்லாவற்றையும் தாண்டி, விபினுக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தார்கள். ஏனென்றால் விபின் வைத்திருப்பது சொந்தமான வேன். அவர் இஷ்டத்துக்கு எப்போது வேண்டுமானாலும் ஓட்டிக்கலாம்.

நிறைய பொம்பளைகளைதான் வேனில் ஏற்றிப்பாராம். எதையாவது பேசி அவர்களை தன் பக்கம் விழ வெச்சிடுவாராம். அதன்படி வேனில் வந்த நிறைய பெண்கள் இன்னமும் விபினுடன் தொடர்பில் இருக்கிறார்களாம். இதையடுத்து போலீசார் ஸ்ரீஜாவை போல எத்தனை பெண்களை விபின் ஏமாற்றி கற்பழித்திருக்கிறார் என்ற விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!