நடத்தையில் சந்தேகம் – மனைவி மீது அம்மிக்கல்லைப் போட்டு கொன்ற கணவர்!


நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அம்மிக்கல்லைப் போட்டு கணவரே கொலை செய்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கரும்பாலை அருகே உள்ள பி.டி காலணியில் முருகன் மற்றும் அவரது மனைவி பஞ்சவர்ணம் வசித்து வந்தனர். பஞ்சவர்ணம் கள்ளத் தொடர்பு வைத்துள்ளதாக முருகன் சந்தேகத்தில் இருந்துள்ளார்.

இதுதொடர்பாக இருவருக்குமிடையே பலமுறை வாக்குவாதங்களும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் மனைவி தூங்கிக்கொண்டிருந்த போது முருகன் அம்மிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.

இதையடுத்து அவரே அருகிலுள்ள காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பஞ்சவர்ணத்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் விசாரணையில், முருகன் மதுவிற்கு அடிமையாகி மனைவியை தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்ததாகவும், போதை தலைக்கேறிய நிலையில் நேற்று தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொலை செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!