திருவள்ளூரில் பரபரப்பு.. சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை- வாலிபர் வெறிச்செயல்..!!


கணவரை இழந்த சிவகாமி கூலி வேலை செய்து வந்தார். இவர் தனது 16 வயது மகளுடன் கட்டிட வேலைக்கு சென்றார்.

இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி சிவகாமியின் மகள் மாயமானார். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் அவர் புகார் செய்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை சிவகாமியுடன் கட்டிட வேலை செய்த ரூபன் (21) என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது. கட்டிட வேலை செய்ய வந்த இவர் ஆசைவார்த்தை கூறி சிறுமியை கேளம்பாக்கத்துக்கு கடத்தி சென்றுள்ளார்.

அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ரூபனை போலீசார் கைது செய்தனர்.

கைதான வாலிபர் ரூபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருவள்ளூர் கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

மீட்கப்பட்ட சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். மேலும் விசாரணை நடைபெறுகிறது.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.