சவுந்தர்யாவை கட்டிக்கப் போற மாப்பிள்ளைக்கு இத்தனை கோடி சொத்துக்களா..?


ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கு மறுமணம் செய்து வைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு ஏற்கனவே தொழிலதிபர் அஸ்வின் என்பவருடன் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான சில வருடங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு வேத் என்ற ஒரு மகன் உள்ளார்.

தற்போது சவுந்தர்யா தனது மகனுடன் போயஸ் தோட்டத்தில் ரஜினியுடன் வசித்து வருகிறார். கணவனை பிரிந்த பிறகு சினிமாவில் கவனம் செலுத்திய சவுந்தர்யா, தனது அக்காவின் கணவர் தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 என்ற படத்தை இயக்கினார். இந்த நிலையில், சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது


அமெரிக்காவில் எம்.பி.ஏ. படிப்பை முடித்த விசாகன், தமிழகத்தில் மிகப் பெரிய மருந்து நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த மருந்து நிறுவனத்தின் மதிப்பு 600 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. வஞ்சகர் உலகம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விசாகன் நடித்து இருந்தார்.

இரு குடும்பத்தினரது சம்மதத்துடன் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!