மகிந்தவுக்கு ஆதரவாக அரசியலில் குதித்த கிரிக்கெட் வீரர்..!


இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் திலகரத்னே தில்ஷான், மகிந்த ராஜபக்சவின் இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார்.

இலங்கை அரசியலில் பெரும் களேபரங்களும் அதிரடி திருப்பங்களும் நாளுக்கு நாள் நடந்து வருகின்றன. இலங்கை அதிபராக ராஜபக்ச நியமிக்கப்பட்டதை எதிர்த்து நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.


இதையடுத்து, இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலகரத்னே தில்ஷான் ராஜபக்சவின் பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்துள்ளதாக, கட்சியின் செயலாளர் சாகர காரியவாசம் தெரிவித்தார்.

42 வயதாகும் தில்ஷான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். தற்போது அரசியலில் குதித்திருக்கும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் கலுதரா தொகுதியில் இவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!