10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி ? ரஜினிகாந்த் அதிரடி கேள்வி…!


சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேர் விவகாரம் குறித்து ரஜினிக்கு ஒன்றுமே தெரியாது என்ற மாய தோற்றத்தை சிலர் ஏற்படுத்துகின்றனர். என்னிடம் கேட்ட கேள்வியில் தெளிவு இல்லை. ராஜீவ் காந்தி வழக்கில் 7 பேர் என்று கேட்டு இருந்தால் நான் கூறி இருப்பேன்.

அந்த 7 பேர் என கேட்டதால் எந்த 7 பேர் என கேட்டேன் . ராஜீவ் வழக்கில் சிறையில் உள்ள 7 பேரைபற்றி தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை. மனிதாபிமான அடிப்படையில் அந்த 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். பேரறிவாளன் பரோலில் வெளியே வந்தபோது தொலைபேசியில் 10 நிமிடங்கள் அவருடன் பேசி அவருக்கு ஆறுதல் கூறியவன் நான்.
பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் கருதினால், அவர்களுக்கு அது ஆபத்தான கட்சி தானே.

ஒருவரை 10 பேர் எதிர்க்கிறார்கள் என்றால் யார் பலசாலி. மோடிதான் பலசாலி என நீங்கள் சொல்வதாக செய்தி போடலாமா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, இதை விட தெளிவாக சொல்ல முடியுமா என்று பதில் கேள்வி கேட்டார் ரஜினிகாந்த.

பாஜக ஆபத்தான கட்சியா என்பதை நான் இப்போது கூற முடியாது. அதை மக்கள் முடிவு செய்யட்டும். நான் இன்னும் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை, முழுமையாக இறங்கியதும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்வேன்.

அமைச்சர்கள் நாகரீகமாக கருத்து தெரிவிப்பது நல்லது. இலவசங்கள் 100 சதவீதம் தேவை, அது ஓட்டுக்காக இருக்க கூடாது என கூறினார்.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!