14 வயசில ஆரம்பிச்சது 42 வயசு வரை நடந்துக்கிட்டிருக்கு – 21 பிள்ளைகளை பெற்ற லண்டன் அம்மணி!


“ஆக்சுவலா 3 குழந்தைகள்தான் பிளான்… அது என்னமோ தெரியல.. எங்களுக்கு 21 வரை லிஸ்ட் கொஞ்சம் பெரிசா போயிடுச்சு” என்கிறார் ஒரு பெண்மணி!

நம்ம ஊரில் 2, 3 குழந்தைகளை பெத்து அவங்கள வளர்க்கறதுக்கே நிறைய பெற்றோருக்கு திண்டாட்டமா போயிடுது. ஆனா ஒரு அம்மா லண்டன்ல எப்படித்தான் இத்தனை குழந்தைகளை பெத்துக்கிட்டாங்களோன்னு ஆச்சரியமா இருக்கு.

சூ ரேட்போர்ட் என்ற பெண்ணுக்கு 42 வயதாகிறது. இவருடைய கணவர் பெயர் நோயல். ரொம்ப ஸ்பெஷலான ஜோடி இவர்கள். ரெண்டு பேருக்குமே குழந்தைகள்-ன்னா ரொம்ப பிடிக்குமாம். அதனால் 2, இல்லன்னா 3 குழந்தைகள் பெத்துக்கணும்னு முடிவு பண்ணாங்க. ரெண்டு பேரும் இப்படி முடிவு பண்ணதோட சரி.. வருஷா வருஷம் குழந்தைகள் பிறந்துட்டுதான் இருந்தது.


அப்பறமா பார்த்தா 9 குழந்தைகள் ஆயிடுச்சே.. குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணிக்கலாம்னு திரும்பவும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அவ்வளவுதான் அந்த முடிவும். திரும்பவும் வீட்டில் குழந்தை சத்தம்தான்!! இப்போ இவங்களுக்கு 21 -வது குழந்தை பிறந்துடுச்சு. 2 நாளுக்கு முன்னாடிதான் குழந்தை பிறந்துள்ளது.

ஒருவழியா குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கலாம்னு திரும்பவும் முடிவுக்கு வந்திருக்கிறார்களாம். இதற்கு காரணம் சூ ரேட்போர்ட் 3 குழந்தைகளுக்கு பாட்டியாகி விட்டாங்களாம். ஆமாம்.. மூத்த பெண், மகனுக்கு குழந்தை பிறந்துவிட்டது. 21 குழந்தைகள் பெற்ற இவர், இதுவரை 800 வாரங்கள் கர்ப்பமாக இருந்திருக்கிறார்.

14 வயசில பிள்ளை பிறக்க ஆரம்பித்தது 42 வயசு வரைக்கும் நடந்துட்டே இருந்திருக்கு. இப்பவும் இந்த ஜோடிக்கு அடுத்த குழந்தை எப்போ பிறக்கும், அதை கொஞ்சி விளையாட மத்த குழந்தைகள் ஆர்வமா இருக்காங்களாம். பாட்டியா? இப்போ குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷனுக்கு முடிவு பண்ணி அதுக்கு அப்ளிகேஷனும் போட்டிருக்காங்களாம்.

அது சரி.. இவங்க ரெண்டு பேரும் முடிவு பண்ணி இதுவரைக்கும் எதை கரெக்டா பண்ணியிருக்காங்க? இப்போ இந்த முடிவு கூட டவுட்டாவே இருக்கு.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!