7 பேர் விடுதலை.. பாஜகவின் கேள்விகளை ரஜினி உள்வாங்கவில்லை – தமிழிசை குற்றச்சாட்டு..!!


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, பாஜக பற்றிய கேள்விகளை ரஜினி சரியாக உள்வாங்கவில்லை.

செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளை ரஜினி சரியாக உள்வாங்காததால் இன்னொரு முறை கேட்டால் நன்றாக இருக்கும். மீண்டும் ஒருமுறை கேள்விகளை கேட்டால் ரஜினி வேறு பதிலை அளிப்பார் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பற்றிய கேள்விக்கு ‘எந்த 7 பேர்’ என ரஜினிகாந்த் பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!