ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி மைத்திரிக்கு வேட்டு வைத்த ராஜபக்சே..!


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த மகிந்த ராஜபக்சே தற்போது அக்கட்சியின் ஆலோசகராக மட்டும் இருந்து வருகிறார்.

அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவால் சமீபத்தில் அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் பாராளுமன்றத்தை கலைத்து மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவிட்டார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ராஜபக்சே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி இன்று பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார். அவருடன் சுதந்திரக் கட்சியை சேர்ந்த சுமார் 50 முன்னாள் எம்.பி.க்களும் பொதுஜன முன்னணியில் இணைந்ததாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராஜபக்சேவின் இந்த முடிவு அதிபர் மைத்ரிபாலாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிகிறது.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!