கழிப்பறைக்கு செல்வதாக கூறி பெண்ணிடம் குழந்தையை கொடுத்து விட்டு தாய் ஓட்டம்..!


திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவர் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் மரவள்ளிக் கிழங்கு வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று இரவு 7 மணி அளவில் பஸ் நிலையத்தில் அவர் வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்த போது இளம் பெண் பிறந்து ஒரு வாரமே ஆன பெண் குழந்தையுடன் அங்கு வந்தார்.

அவர் கோவிந்தம்மாளிடம் பேச்சு கொடுத்தார். பின்னர் கழிவறைக்கு செல்வதால் குழந்தையை கவனிக்கும்படி கூறி அவரிடம் கொடுத்துவிட்டு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் திரும்பி வரவில்லை.

இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

குழந்தையை விட்டுச் சென்ற பெண் யார்? தவறான முறையில் பிறந்த குழந்தையா? அல்லது கடத்தப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!