சென்னையில் ஒருதலைக் காதலால் எரித்து கொல்லப்பட்ட இந்துஜாவின் தாயார் மரணம்…!!


சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இந்துஜா(22). அவரது தந்தை வெளிநாட்டில் பணிபுரிவதால், இவர் தாய் ரேணுகா மற்றும் தங்கை நிவேதாவுடன் ஆதம்பாக்கத்தில் வசித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் அவருடன் படித்து வந்த அசோக் என்பவர் இந்துஜாவை ஒருதலைப்பட்சமாகக் காதலித்து வந்தார். இதற்கு இந்துஜா ஒத்துக்கொள்ளவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு தொடர்ந்து இந்துஜாவுக்கு தொல்லை கொடுத்து வந்த அசோக் சில வாரங்களுக்கு முன்பு இந்துஜாவின் வீட்டுக்குச் சென்று அனைவரையும் மிரட்டியுள்ளார்.


சம்பவத்தன்று இந்துஜா வீட்டிற்கு வந்த அசோக் தான் வைத்திருந்த பெட்ரோலை இந்துஜா மீது ஊற்றினார். பெட்ரோலானது,அருகிலிருந்த ரேணுகா, நிவேதா மீதும் சிந்தியுள்ளது. அசோக் திடீரென இந்துஜா மீது தீயை கொளுத்திப் போட்டார்.

இதில் பலத்த தீக்காயமடைந்த 3 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்க்கப்பட்டனர். இந்துஜா அங்கு உயிரிழந்தார்.

கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்றுவந்த ரேணுகா செவ்வாய்க்கிழமை இரவு மரணமடைந்தார்.

Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!