நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம் – பாராளுமன்ற கட்டிடம் குலுங்கியது..!


நியூசிலாந்தில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. டாமரூனியில் இருந்து தென்மேற்கில் சுமார் 25 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 165 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியிருந்தது.

தலைநகர் வெலிங்டன் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுமார் 30 வினாடிகள் அதிர்வு இருந்தது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். இதேபோல் வடக்கு தீவு, தெற்கு தீவு என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் காயமோ, உயிரிழப்போ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

வெலிங்டனில் உள்ள பாராளுமன்றக் கட்டிடமும் குலுங்கியது. இதனால் அவை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. பின்னர் நிலநடுக்கத்தினால் காயமோ, பெரிய அளவில் இழப்புகளோ ஏற்படவில்லை என தகவல் வெளியானதும் அவை மீண்டும் தொடங்கியது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!