நாய் குரைத்ததால்.. உரிமையாளருக்கு நடந்த கொடூரம்..!! அதிர்ச்சி சம்பவம்..!!


சென்னையில் நங்கநல்லூர் அம்பேத்கர் நகரில் சுகுணா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் சக்தி என்பவர் வசித்து வந்துள்ளார். சுகுணா தினமும் தான் வளர்த்து வந்த நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று சுகுணா தான் வளர்த்து வந்த நாயுடன் நடைப்பயிற்சிக்கு செல்லும்போது சக்தி வீட்டின் அருகே சென்றுள்ளார். அப்போது சுகுணாவின் நாய் சத்தமாக குறைத்ததோடு, அவர் வீட்டின் சுவர் மீது சிறுநீர் கழித்ததாக தெரிகிறது.

இதனால் சக்தி ஆத்திரமடைந்து, நாய் உரிமையாளர் சுகுணாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், திடீர் என கோபத்தில் அருகில் இருந்த இரும்பு கம்பியால் சுகுணாவின் தலையில் கொடூரமாக தாக்கினார்.

இந்நிலையில் சக்தி இரும்பு கம்பியால் தாக்கியதில் சுகுணாவை ஆதம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரும்பு கம்பியால் தாக்கிய சக்தி தற்போது தலைமறைவாகியுள்ளார். அதனால் வீட்டில் இருந்த அவரது அண்ணனை அழைத்து சென்று மடிப்பாக்கம் போலீசார் காவல் நிலையம் விசாரணை செய்து வருகின்றனர்.source-netrigun

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!