குழந்தையை உறங்கவைத்து விட்டு கடமையை செய்யும் பெண் போலீஸ்..!! குவியும் பாராட்டு..!!


உத்தர பிரதேசத்தில் கோட்வாலி என்ற காவல் நிலையத்தில் அர்ச்சனாவுக்கு அனிகா என்ற பெண் காவலர் பணியாற்றி வருகிறார். இவருக்கு 6 மாத கைகுழந்தை உள்ளது.

வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்று விடுவதால் தனது 6 மாதகைக்குழந்தையை காவல்நிலையத்திற்உ அழைத்து சென்று மேஜையில் உறங்க வைத்துவிட்டு தமது பணிகளை பார்க்கிறார்.

இந்த புகைப்படத்தை தமது டுவிட்டரில் பதிவிட்ட உயர் அதிகாரி ஒருவர் அந்த பெண்ணின் கடமை உணர்வை பாராட்டி உள்ளார். அவருக்கு மற்றொரு உயர் அதிகாரி ரூ 1000 வெகுமதி அளித்துள்ளார்.

பெண் காவலரின் கடமையை பாராட்டுவதை விட அனைத்து காவல்நிலையங்களிலும் ஆண், பெண் காவலர்களின் குழந்தைகளை பரமாரிக்கும் அறை ஒதுக்கி தருமாறு உயர் அதிகாரிகளுக்கு சமூக வலைதள பயனாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.source-dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!