கணவரை மிரட்ட பெண் செய்த அதிர்ச்சி செயல்..!! பரபரப்பு சம்பவம்..!!


கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 54). கார் டிரைவர். இவரது மனைவி கீதா ராதாகிருஷ்ணனுக்கு மதுப்பழக்கம் உண்டு.

இதனை கீதா கண்டித்து அடிக்கடி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்றும் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கீதா தற்கொலை செய்யப்போவதாக கூறி மண்ணெய் உடலில் ஊற்றி தீக்குச்சியை பற்ற வைத்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது தீப்பிடித்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராதா கிருஷ்ணன் உடல் கருகிய மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

பலத்த தீக்காயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீதா பரிதாபமாக இறந்தார்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!