இலங்கையில் பதவி வெறி சண்டை- நான்தான் பிரதமர்.. நானும்தான் பிரதமர்…!


இலங்கை அரசியல் களம் படு சூடாகியுள்ளது. நான் இன்னும் பிரதமர் தான் என்று ரணில் விக்கிரசிங்கே கூறி வருகிறார். மறுபக்கம் புதிதாக பிரதமராகியுள்ள ராஜக்சே சூட்டோடு சூடாக தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் என்று மாற்றியுள்ளார்.

இலங்கை அரசியல் களத்தில் இன்று பெரும் அக்கப்போர் நடந்தேறியது. சீனாவின் தீவிர ஆதரவாளரான ராஜபக்சேவை அதிரடியாக பிரதமராக்கி விட்டார் அதிபர் சிறிசேனா.

இதை இலங்கை மக்களே எதிர்பார்க்கவில்லை. ஒட்டுமொத்த நாடும் பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளது. சுத்தமாக பெரும்பான்மை பலம் இல்லாத கூட்டணி சிறிசேனா – ராஜபக்சே கூட்டணி. ஆனால் இவர்களை விட அதிக எம்.பிக்களைக் கொண்ட ரணில் விக்கிரசிங்கேவை விரட்டி விட்டது.

பதவியேற்ற கையோடு தனது டிவிட்டர் பக்கத்தை பிரதமர் என்று மாற்றியுள்ளார் ராஜபக்சே. ஆனால் என்ன கொடுமை என்றால் இவரது டிவிட்டர் பெயர் பிரஸ்ராஜபக்சே என்பதுதான். அதாவது பிரசிடென்ட் ராஜபக்சே.

மறுபக்கம் ரணில் விக்கிரசிங்கே தனது டிவிட்டர் பக்கத்தில் இலங்கை பிரதமர் என்றே தொடர்ந்து வைத்துள்ளார். இவர்களின் இந்த பதவி வெறி சண்டையால் இலங்கையே அல்லோகல்லப்பட்டுப் போயுள்ளது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!