மனைவியுடன் வாலிபர் கள்ளத் தொடர்பு.. நேரில் பார்த்த கணவன் வெறிச்செயல்..!!


தனது மனைவியுடன் தவறான தொடர்பை கொண்டிருந்தாக கூறப்படும் இளைஞனை கத்தியால் குத்தி படுகாயம் ஏற்படுத்திய ஒருவரை மாவனெல்லை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

34 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவனெல்லை, இழுக்கொட பிரதேசத்தில் வசித்து வரும் 31 வயதான சந்தேக நபரின் மனைவி அதே பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான இளைஞனுடன் தவறான தொடர்பை வைத்திருந்தாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமான தகவல்களை அறிந்த கணவன், குறித்த இளைஞனை வீட்டுக்கு வந்து மனைவியுடன் பேசுமாறு கூறியுள்ளார். இதற்கு அமைய இளைஞன் வீட்டுக்கு சென்று மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த போது, சந்தேக நபர் இளைஞனை கத்தியால் குத்தியுள்ளார்.

கத்தி குத்துக்கு இலக்கான இளைஞர் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞனின் உடலில் 15 இடங்களில் கத்தி குத்து காயங்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மாவனெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். மாவனெல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.source-netrigun

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!