பப்புவா நியூ கினியா தீவில் திடீர் நிலநடுக்கம்… சுனாமி வருமா என அச்சத்தில் மக்கள்..?


பப்புவா நியூ கினியா தீவில் நேற்றிரவு 4.8 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பப்புவா நியூ கினியா தீவில் நேற்றிரவு 9:34 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இயாலிபு நகருக்கு தெற்கே சுமார் 59 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்திலும் சுமார் 4.8 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. நேற்று முன்தினமும் இங்கு 6.2 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் கடந்த 1998-ம் ஆண்டு கடலுக்கு அடியில் அடுத்தடுத்து உண்டான 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக மூன்று முறை சுனாமி ஏற்பட்டு, சுமார் 2,100 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!