இறந்து போன மகனின் பிறந்த நாளில் உயிரை விட்ட குடும்பத்தினர் – பின்ணனியில் பகீர் தகவல்..!


குடியாத்தம் அருகே உள்ள அமணாங்குப்பம் பகுதியில் மூத்த மகன் உயிரிழந்த சோகத்தில், குடும்பமே தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அமணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் திருவேங்கடம்-பரிமளா என்ற தம்பதியினர். இவர்களுக்கு மூத்த முகேஷ்(7), மாதேஷ்(3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரின் மூத்த மகன் முகேஷ் மூன்று மாதங்களுக்கு முன்பு மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில், இன்று காலை திருவேங்கடம் வீட்டில், நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னலை திறந்து பார்த்தபோது, திருவேங்கடம், பரிமளா, மாதேஷ் ஆகிய மூன்று பேரும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

பின், சம்பவ இடம் வந்த குடியாத்தம் காவல்துறை அதிகாரி இருதயராஜ் தலைமையிலான போலீசார், சடலத்தை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

பின்பு முதல் கட்ட விசாரணையில், சமீபத்தில் இறந்த முகேஷிற்கு நேற்று பிறந்தநாள் என்பதால், திருவேங்கடம் ஆசையுடன் குடும்பத்தினருடன் கொண்டாடி உள்ளார்.

அப்போது முகேஷ் நினைவுகள் தாங்க முடியாத சோகத்தில் மனைவி, மகனை தூக்கிலிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் கடன் உள்ளிட்ட வேறு ஏதும் பிரச்சனை உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!