மயக்க மருந்து கொடுத்து என்னை பலாத்காரம் செய்தனர் – பிக்பாஸ் நடிகை பரபரப்பு புகார்…!


பாலியல் துன்புறுத்தல், பாலியல் துஷ்பிரயோகம் அல்லது தவறான நடத்தை ஆகியவற்றின் காரணமாக பாலிவுட் பிரபலங்கள் மீது மீ டூ என தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

தற்போது மீ டூ இயக்க பிரச்சாரத்தின் வேகத்தை அதிகரிக்கும் வகையில், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான பூஜா மிஸ்ரா தனது கதையை பகிர்ந்துள்ளார், மேலும் அவரது இன்ஸ்டாகிராம் மூலம் பதிவு செய்யும் தொடர்ச்சியான வீடியோக்களின் மூலம் அவரின் துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பூஜா மிஸ்ரா சல்மான் கான் மற்றும் அவரது சகோதரர்கள்- அர்பாஸ் மற்றும் சோஹைல் ஆகியோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டி உள்ளார். சத்ருகன் மற்றும் பூனம் சின்ஹா தொந்தரவு கொடுத்தார்கள். மல்லிகா அரோரா கான் என் மீது பொறாமைபட்டார். அந்த திட்டத்தில் இருந்து வெளியேற்றினார்.

உண்மையில், இந்த பிரபலங்கள் அனைவரும் மனரீதியாக மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி உள்ளார். இது இங்கே முடிவுக்கு வரவில்லை. சத்ருகன் சின்ஹா தனது மகள் சோனாக்ஷி சின்ஹா வெற்றிக்காக செய்வினை செய்ததாக பூஜா மேலும் குற்றம் சாட்டினார்.

சல்மான், அர்பாஸ் மற்றும் சோஹைல் பல சந்தர்ப்பங்களில் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவரது வாழ்க்கை மற்றும் உடல்நலத்தை இழந்துவிட்டதாகவும் பூஜா மிஸ்ரா கூறியுள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!