ஓட்டலில் துப்பாக்கியை காட்டி பாலியல் டார்ச்சர் கொடுத்த எம்.எல்.ஏ – நடிகை போடும் புது குண்டு..!


தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி (டி.ஆர்.எஸ்.) எம்.எல்.ஏ. ஜீவன் ரெட்டி, துப்பாக்கியை காட்டி எனக்கும் மற்ற நடிகைகளுக்கும் செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். ஸ்ரீரெட்டி யார் என்றே எனக்கு தெரியாது என்று அந்த எம்.எல்.ஏ. மறுப்பு தெரிவித்துள்ளார்.

திரை உலகின் பிரபலமான ஆண்கள் பலர், பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி. ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை கதை சினிமாவாகிறது. இதில் அவரே நடிக்கிறார்.

இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி எம்.எல்.ஏ. தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

“ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி (டி.ஆர்.எஸ்.) எம்.எல்.ஏ. ஜீவன் ரெட்டி எனக்கும் மற்ற நடிகைகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தார். அவருக்கு பின்னால் தயாரிப்பாளர்கள் இருந்தனர்.


மேலும் பல பெண்களை வரவழைத்து அவர் பாலியல் தொந்தரவு செய்தார். துப்பாக்கியை காட்டி, நாங்கள்தான் அரசாங்கம், நாங்கள் நினைத்தால் எந்த முன்னணி நடிகரையும் எனது படத்தில் நடிக்க வைக்க முடியும் என்றார். அவர் என்னிடம் பட வாய்ப்புகள் வாங்கி தருவதாகவும் கூறினார். நான் மேலும் பலரது பெயர்களை ‘மீ டூ’ வில் வெளியிட இருக்கிறேன்.” இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

ஸ்ரீரெட்டியின் பாலியல் குற்றச்சாட்டை டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏ. ஜீவன் ரெட்டி மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும் போது “ஸ்ரீரெட்டி யார் என்றே எனக்கு தெரியாது. நான் அவரை சந்தித்ததோ அல்லது பேசியதோ கிடையாது. சரியான நேரத்தில் இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்குவேன். தற்போது இதற்கு மேல் எதுவும் கூற இயலாது” என்றார்.-Source: punnagai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!