நான் இப்போதும் அவரை காதலிக்கிறேன்… அது மாறாது – பிக்பாஸ் புகழ் யாஷிகா பதிலடி…!


பிக்பாஸ் 2வது சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதற்கு முன் அவர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்திருந்ததால் ரசிகர்கள் மத்தியில் அதிகம் தெரிந்தவராகத்தான் இருந்தார். பிக்பாஸ் அவரது புகழை பலமடங்கு கூட்டியுள்ளது.

இந்நிலையில் தன்னை பற்றி வரும் மீம்கள் பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ள அவர், “Abusiveவாக மீம் போட வேண்டாம். நாங்களும் மனிதர்கள்தான். உடை பற்றி கமெண்ட் செய்வது தவறு. ஒரு பெண்ணின் உடையை வைத்து கேரக்டர் பற்றி முடிவு செய்வது சரியல்ல. அப்படி வரும் மீம்களை பார்த்தால் வருத்தமாக உள்ளது” என கூறியுள்ளார்.


மேலும் மஹத் குறித்து கேட்டதற்கு “அவர் வேறு ஒருவருடன் காதலில் இருக்கிறார். அவர் சந்தோசம் முக்கியம். அவரிடம் இருந்து நான் எதுவும் எதிர்பார்க்கவில்லை. அவரை இப்போதும் காதலிக்கிறேன். அது மாறாது.

காலப் போக்கில் சரியாகிவிடும். என் பெயரை சொல்லி அவருக்கு எதுவும் பிரச்சனை ஏற்படுத்த வேண்டாம்” என கேட்டுக் கொண்டுள்ளார் நடிகை யாஷிகா.-Source: dina.seithigal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!