பிரதமராக பதவியேற்பதற்கு முன்னர் குஜராத் மாநில முதல் மந்திரியாக பதவி வகித்த பிரதமர் மோடி குஜராத்தி மொழியில் சில கவிதை தொகுப்புகளை இயற்றியுள்ளார்.
அவ்வகையில், கடந்த 2012-ம் ஆண்டு ‘குமே அய்னோ கர்போ’ என்ற தலைப்பில் பாடல் ஒன்றை அவர் எழுதியிருந்தார்.
இந்நிலையில், நவராத்திரி விழாவையொட்டி அந்த பாடலுக்கு பார்வையிழந்த மாணவிகள் ஒன்றுகூடி ‘கர்பா’ நடனம் ஆடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அகமதாபாத் நகரில் உள்ள அந்த் கன்யா பிரகாஷ் குருஹ் பள்ளியை சேர்ந்த இந்த பார்வையிழந்த மாணவிகள் குஜராத்தில் மிகவும் பிரசித்தியான ‘கர்பா’ நடனத்தின் மூலம் தனது பாடலுக்கு உயிரூட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அந்த நடனக் காட்சி வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் இணைத்து வெளியிட்டுள்ளார்.source-maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!