அரசியலுக்கும், மருத்துவ முகாம்களுக்கும் தொடர்பில்லை – கமல்ஹாசன்!


திருவள்ளூரில் ஆவடி நகரில் தனது 63வது பிறந்த நாள் விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்துள்ளார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, தேங்கியுள்ள மழைநீரை அரசு வெளியேற்றி வரும் நிலையில் மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம்.


முடிந்தவரை உதவ வேண்டும் என்பதற்காக மருத்துவ முகாமை தொடங்கி வைக்கின்றோம். மருத்துவ முகாம்களுக்கும், அரசியலுக்கும் தொடர்பில்லை.

மருத்துவ முகாமிற்காக அரசியலை பயன்படுத்தி கொள்வோம். மழை நேரங்களில் தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. அதனால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.


தொற்றுநோய்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மருத்துவ முகாமை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

எங்களுடைய பணிகள் அமைதியாக நடந்து கொண்டிருக்கின்றன. எங்களுடைய முயற்சி வலுப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!