திருமணம் ஆன 4 மாதத்தில் பட்டதாரி பெண் எடுத்த விபரீத முடிவு – கதறியழுத தந்தை…!


வியாசர்பாடி காசிநகரை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மகன் கார்த்திக் (வயது 30). சென்டிரிங் வேலை செய்து வருகிறார்.

4 மாதங்களுக்கு முன்பு கார்த்திக்கும், ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்த கோட்டைசாமி மகள் கவாஸ்கி (26) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. கவாஸ்கி எம்.ஏ. பட்டதாரி. ராமநாதபுரத்தில் ரே‌ஷன் கடை கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார். கார்த்திக்-கவாஸ்கி தம்பதியினர் காசிநகர் 15-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். 4 மாத விடுமுறையில் இருந்த கவாஸ்கி நாளை ரே‌ஷன் கடை கண்காணிப்பாளர் பணியில் மீண்டும் சேருவதற்காக ராமநாதபுரம் செல்ல வேண்டும்.

இந்த நிலையில் கவாஸ்கி நேற்று வியாசர்பாடி காசிநகர் வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்தி எம்.கே.பி. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மகள் கவாஸ்கி இறந்த தகவல் அறிந்ததும் அவரது தந்தை கோட்டைசாமி மற்றும் உறவினர்கள் சென்னை வந்தனர். அவர், தனது மகள் தற்கொலை செய்து கொள்ள மாட்டாள். சாவில் மர்மம் இருக்கிறது என்று போலீசில் புகார் செய்தார்.

திருமணம் ஆகி 4 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.-Source: maalaimalar

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!