இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப் பட்ட நகைகள் மற்றும் பணம் என்பனவற்றினை தேடி நேற்றையதினம் முல்லைத்தீவில் அகழ்வு நடவடிக்கையினை பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.
முல்லைத்தீவு சுதந்திரபுரம் நிரோஜன் விளையாட்டு மைதானத்திலேயே இந்த அகழ்வு பணிகள் முன்னேடுக்கபட்டிருந்தது. அதிரடிப்படையினரின் விசேட பாதுகாப்புக்கு மத்தியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.எஸ்.சம்சுதீன் முன்னிலையில் இந்த அகழ்வு நடவடிக்கை காலை 10 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பிரதேசத்தில் விடுதலைப்புலிகளால் நூற்றுக்கணக்கான கிலோகிராம் தங்கம் புதைக்கபட்டிருப்பதாக தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டு நடைபெற்ற இந்த அகழ்வு நடவடிக்கையில் எந்தவித பொருட்களும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அகழ்வு பணிகள் நீதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறுத்தபட்டது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!