முல்லைத்தீவில் புலிகளின் தங்கப் புதையலைத் தேடி இரா­ணு­வத்தினர் படையெடுப்பு…!


இறுதி யுத்தம் இடம்­பெற்ற வேளையில் தமி­ழீழ விடு­த­லைப் ­பு­லி­களால் புதைக்கப் பட்ட நகைகள் மற்றும் பணம் என்­ப­ன­வற்­றினை தேடி நேற்றையதினம் முல்லைத்தீவில் அகழ்வு நட­வ­டிக்­கை­யினை பொலிஸார், விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் மற்றும் இரா­ணு­வத்­தினர் இணைந்து முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.


முல்­லைத்­தீவு சுதந்­தி­ர­புரம் நிரோஜன் விளை­யாட்டு மைதா­னத்­தி­லேயே இந்த அகழ்வு பணிகள் முன்­னே­டுக்­க­பட்­டி­ருந்­தது. அதி­ர­டிப்­ப­டை­யி­னரின் விசேட பாது­காப்­புக்கு மத்­தியில் முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்ற நீதி­பதி எஸ்.எம்.எஸ்.சம்­சுதீன் முன்­னி­லையில் இந்த அகழ்வு நட­வ­டிக்கை காலை 10 மணி­ய­ளவில் ஆரம்­ப­மாகி நடை­பெற்­றது.


விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ருக்கு கிடைத்த இர­க­சிய தக­வலின் அடிப்­ப­டையில் குறித்த பிர­தே­சத்தில் விடு­த­லைப்­பு­லி­களால் நூற்­றுக்­க­ணக்­கான கிலோ­கிராம் தங்கம் புதைக்­க­பட்­டி­ருப்­ப­தாக தெரி­வித்து முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்றின் அனு­மதி பெறப்­பட்டு நடை­பெற்ற இந்த அகழ்வு நட­வ­டிக்­கையில் எந்தவித பொருட்களும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அகழ்வு பணிகள் நீதிபதியின் உத்தரவுக்கு அமைய நிறுத்தபட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!