விடுதலைப்புலிகளை ஆதரித்த விஜயகலா மகேஸ்வரன் அதிரடி கைது…!


முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்று முன்னர் கொழும்பில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலக விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவர் இன்று காலை கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலக விசாரணைப் பிரிவினரால்கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடந்த ஜூலை மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற அரச நிகழ்வு ஒன்றில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

விஜயகலா மகேஸ்வரனின் உரை தென்னிலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.


இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டு எதிரணி ஆகியன விஜயகலா மகேஸ்வரனின் இராஜாங்க அமைச்சு பதவியை பறிக்குமாறு வலியுறுத்தியிருந்த நிலையில் அவர் தனது இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையில் விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டிருந்த குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்றைய தினம் அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள விஜயகலா மகேஸ்வரனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.-Source: ibctamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!