விளையாட்டால் நடந்த விபரீதம் – வாஷிங் மிஷினுள் உயிருக்கு போராடிய 4 வயது சிறுவன்..!


மலேசியாவின் சிலாங்கூர் பகுதியில் உள்ள தமன் சென்டோசாவில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கடை உள்ளது. அங்கு தாய் அவரது நான்கு வயது மகன் மற்றும் மாமா ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது மாமா விளையாட்டிற்காக சிறுவனை அங்கிருக்கும் வாஷிங் மிஷினுக்குள் வைத்து அடைத்துள்ளார். ஆனால் அந்த விளையாட்டே வினையாக போயுள்ளது.

சிறுவனை அதன் பின் வெளியில் எடுக்க முடியவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது மாமா மற்றும் தாயார் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக அருகிலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அங்கு வந்து சிறுவனை காப்பாற்ற போராடியுள்ளனர்.

அதில் ஒரு நபர் சாதுர்யமாக செயல்பட்டு சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் அவரின் மாமாவிற்கு 20 வயது இருக்கும் எனவும், சிறுவனின் அம்மாவை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக விளையாட்டிற்கு செய்தது, இப்படி நடந்துவிட்டது என்று கூறியுள்ளார். -Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!