புழல் சிறையில் குன்றத்தூர் அபிராமியால் எற்பட்ட பரபரப்பு!!!

புழல் சிறையில் அபிராமி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிறையிலிருக்கும் அபிராமி யாருடனும் பேசாமல் இருப்பதால் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என நம்பத் தகுந்த தகவல்கள் வெளியாகி வருகின்றன..

குன்றத்துார் பிரியாணி கடையில் பணியாற்றிய ஊழியர், சுந்தரம், என்பவருடன் அபிராமிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. சுந்தரத்துடன் சேர்ந்து வாழ்வதற்காக, கடந்த மாதம், 31 ஆம் தேதி குழந்தைகள் இருவருக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்தும், கழுத்தை நெரித்தும் அபிராமி கொலை செய்தார்.


அதே நேரம் விசாரணைக்காக சுந்தரத்துடன் ஒரே வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட போது சுந்தரம் அபிராமியின் முகத்தை திரும்பி கூட பார்க்கவில்லை என்றும் அபிராமி தான் கதறி அழுததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாரணைக்கு பின், இருவரின் நீதிமன்ற காவலை, வரும்,12 வரை நீட்டித்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தரத்திற்காக பெற்ற பிள்ளைகள் என்றும் பாராமல் விஷம் வைத்து கொலை செய்து விட்டேன் என்ற குற்றவுணர்வில் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!