இப்படியும் ஒரு விசித்திர விளம்பரமா..? செவ்வாய் கிரகத்தையும் விட்டு வைக்காத விஞ்ஞானிகள்..!


1500 ரூபாய் கொடுத்தால் செவ்வாய் கிரக மண் கிடைக்கும் என்று அமெரிக்காவில் வினோத விளம்பரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மனிதர்கள் தற்போது செவ்வாய் கிரகத்தை குறி வைத்து இருக்கிறார்கள். செவ்வாயில் ஏற்கனவே அமெரிக்காவின் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் தீவிரமாக ஆராய்ச்சி நடத்தி வருகிறது.

இந்த நிலையில் அந்த ஆராய்ச்சியை துரிதப்படுத்த ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. செவ்வாய் கிரக மணலை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறார்கள்.

மத்திய புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த மணலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த மணல் ரூபாய் 1500 ஆகும். 1500 ரூபாய்க்கு ஒரு கிலோ மணல் வாங்கலாம். அதை வைத்து நமக்கு தேவையான ஆராய்ச்சி செய்யலாம். பூஜை செய்யலாம். விதை போட்டு செடி வளர்த்து பார்க்கலாம்.

ஆனால் இங்குதான் டுவிஸ்ட் இருக்கிறது. இந்த மணல் உண்மையான செவ்வாய் கிரக மணல் கிடையாது. அங்கிருந்து எடுத்து வந்து உருவாக்கப்பட்ட மணல். ஆனால் அதற்கும் இதற்கு ஒரு சதவிகிதம் கூட வித்தியாசம் கிடையாது. அதில் இருக்கும் வேதிப்பொருட்களை வைத்தே இதை உருவாக்கி இருக்கிறார்கள்.

இதை இப்படி இவர்கள் உருவாக்கி விற்க ஒரு காரணம் இருக்கிறது. இதை யார் வேண்டுமானாலும் ஆராய்ச்சி செய்து புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்று மத்திய புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். அதேபோல் இவர்களே ஏதாவது சோதனை செய்து அதில் ஏதாவது பெரிய கண்டுபிடிப்பு நிகழ்ந்தால் சந்தோசம் என்கிறார்கள்.

இந்த நிலையில் இப்போதே பல பேர் இதை வாங்க தொடங்கிவிட்டனர். ஆம், கிட்டத்தட்ட 100க்கும் அதிகமானோர் இப்போதே இந்த மணலுக்கு ஆர்டர் கொடுத்து இருக்கிறார்கள். இப்போதைக்கு இது அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கும். விரைவில் மற்ற நாடுகளுக்கும் அளிக்கப்படும். இதை இதுவரை ஆர்டர் செய்த பலர் ஆராய்ச்சியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!