சின்னத்திரை நடிகையுடன் நெருக்கம்… போலீஸ்காரர் செய்த அதிர்ச்சி செயல்..!


சென்னை வளசரவாக்கம் எஸ்.வி.எஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சின்னத்திரை நடிகை கீதா.

கடந்த மாதம் தனது வீட்டின் முன்பு உள்ள மழை நீர் கால்வாயில் மர்ம நபர்கள் போட்டு சென்ற பச்சிளம் குழந்தையை காப்பாற்றியவர்.

இந்த நிலையில் டி.வி. நடிகை மீது எம்.ஜி.ஆர். நகர் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

எனது மகள் ஷாலினியுடன் வளசரவாக்கத்தில் வசித்து வருகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு தலைமை காவலர் மாரிமுத்து அறிமுகமானார்.

என்னிடம் நெருங்கி பழகிய மாரிமுத்து சிறுக சிறுக என்னிடம் இருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றார். கடந்த 6 மாதங்களாக பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றி வந்த அவர் தலைமறைவாகி விட்டார்.

இந்நிலையில் அவரை நேற்று முன்தினம் எம்ஜிஆர் நகர் மார்கெட்டில் பார்த்து பணம் கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசி என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எம்.ஜி.ஆர். நகர் போலீசார் பண மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவலர் மாரிமுத்து மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாரிமுத்து விருகம்பாக்கம், பாண்டி பஜார் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வந்ததும் பல்வேறு புகாரில் சிக்கிய அவர் தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!